Tuesday, September 18, 2012

திருத்தந்தையின் ஆசிர்வாதம் செய்த அற்புதம்

சிறுமி சிட்னியில் உயிர்தப்பியது


திருத்தந்தை 16ம் பெனடிக் 2008ம் ஆண்டு அவுஸ்திரேலியவிற்கு உலக இளையோர் நாளைக் கொண்டாச் சென்றிருந்தார். அப்போது சிட்னி; மாநகரில் பிறந்து ஒரு சில மாதங்களே ஆன
Claire Hill என்னும் பெண் குழந்தையை கையிலேந்தி ஆசீர்வதித்தார்.

அதே பெண்குழந்தை கடந்த 15.2.2011 அன்று ஒரு பாரிய விபத்திலிருந்து அற்புதமான வகையில் காப்பற்றப்பட்டுள்ளார் என்று 18.2.2011 அன்று
Sydney Morning Herald  என்னும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது மூன்று வயதாகும்
Claire Hill  வின் தந்தை Peter Hill ஒருMini Bus   சாரதியாவார். அவர் கடந்த 15.2.2011 அன்று ஒரு வாயு நிரப்பு  நிலையத்திற்கு மகள்  Claire Hill ளை எற்றிக்கொண்டு தன் 22 ஆசனங்கள் கொண்ட சிற்றுந்தில் சென்றுள்ளார். அங்கு வரிiயில் நிறுத்திநின்ற வேளை சிறுமி  சிற்றுந்தின் பின்புறமாக சென்றுள்ளதை தந்தை அறிந்து கொள்ளவில்லை.    Peter Hill  தன் சிற்றுந்தை பின்புறமாய் எடுக்கும் வேளையில் அவரது மகள் Claire Hill வாகனத்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். சிற்றுந்து சிறுமியின் வயிற்றுப் பகுதியால் முற்றிலுமாக ஏறி இறங்கியது.

நடந்ததை உணர்ந்த 
Peter Hill வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடி வந்தார். கடவுளே என் மகளைத் நானே கொன்றுவிட்டேன் என்று அவர் நினைத்தார்;. ஆனால், சிறுமி Claire Hill எந்த வித ஆபத்தும் இல்லாமல் அற்புதமாக காப்பற்றப்பட்டதை அறிந்தார். வாகனத்தின் சக்கர  பதிவுகள் சிறுமியின் சிறிய வயிற்றுப் பகுதியில் பதிந்துள்ளதை நன்கு காணகூடியதாக உள்ளது ஆயினும் எலும்புகள், உள் உறுப்புக்கள் எதுவும் சேதமடைய வில்லை. சுpட்னியின் மருத்துவர்கள் சில சிறிய காயங்களுக்கம் வெளிப்புறக் உராய்வுகளுக்கும் சிறுமி Claire Hill மருத்துவம் செய்தனர். இவர்கள் பாரிய காயங்கள் எதுவுமின்றி சிறுமி எவ்வாறு  காப்பாற்றப்பட்டார் என் பதுலுரைக்க முடியாது மெனமாக சென்றனர். ஆயினும் இது ஒரு பெரிய புதுமையே என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.Claire Hill இன் தந்தை Peter Hill இ தாய் Sue Hill லும் தமது குழந்தை காப்பற்றப்பட்டமை ஆனது திருத்தந்தை 16ம் பெனடிக் 2008ம் ஆண்டு அவுஸ்திரேலியா வந்தபோது எமது குழந்தையை கையிலேந்தி ஆசீர்வதித்தமையாலேயே நடைபெற்ற புதுமை என நம்பிக்கை வெளியுட்டுள்ளனர். காவல் சம்மனசானவரே சிற்றுந்தை தாங்கி அதன் பாரத்தை குழந்தைமீது படவிடாமல் பாந்திருந்தார் என்று தந்தை Peter Hillஆணித்தரமாக கூறினார்

தாய்
Sue Hill தெரிவிக்கையில் விபத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் அவர் சிறுமிக்கு மரியன்னையின் பதக்கம் ஒன்றை தன் குழந்தைக்கு அணிவித்ததாகவும், தங்கள் குழந்தை செபத்தினாலேயே காப்பாற்றப்பட்டாள் என்றும் கூறினார்.

No comments: